அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம்

சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில் கழக அவைத் தலைவர் இ. மதுசூதனன் தலைமையில், கழக ஒருங்கிணைப்பாளர், தமிழ் நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ் நாடு முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிசாமி ஆகியோர் முன்னிலையில், காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், கூட்டத்தில் பங்குபெற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டும், முகக் கவசம் அணிந்தும், இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் நடைபெற்றது. கழக செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், 15 தீர்மானங்கள் அனைவராலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.