ஏடிசி ஆசியா பசிபிக் நிறுவனத்தின் ரூ.2480.92 கோடி அன்னிய நேரடி முதலீட்டுக்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல்

ஏடிசி தொலை தொடர்பு கட்டமைப்பு நிறுவனத்தில், ஏடிசி ஆசியா பசிபிக் நிறுவனம் ரூ.2,480.92 கோடி முதலீடு செய்ய இந்திய அமைச்சரவையின் பொருளாதார விவகார குழு இன்று ஒப்புதல் அளித்தது. மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகார குழு கூட்டம், பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று நடந்தது. இதில் ஏடிசி தொலைதொடர்பு கட்டமைப்பு நிறுவனத்தின் 12.32 சதவீத பங்குகளை, ஏடிசி ஆசியா பசிபிக் நிறுவனம் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.2480.92 கோடி அன்னிய நேரடி முதலீடு கிடைக்கும். 2018-19 முதல் 2020-21ம் ஆண்டு வரை ஏடிசி ஆசியா பசிபிக் நிறுவனத்தின் ஒட்டுமொத்த முதலீடு ரூ.5417.2 கோடியாக அதிகரித்துள்ளது.