கொரோனா தொற்றில் உயிரழந்த ஆயாவாளர் பருஷோத்தமனுக்கு அஞ்சலி

சென்னை பெருநகர காவல், J-8 நீலாங்கரை போக்குவரத்து காவல் ஆய்வாளர் R.புருஷோத்தமன் பணியின்போது கொரோனா பாதிப்படைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 27.9.2020 அன்று உயிரிழந்தார். மறைந்த காவல் ஆய்வாளர் புருஷோத்தமனக்கு செல்வி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் 28.9.2020 அன்று J-8 நீலாங்கரை போக்குவரத்து காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், மறைந்த காவல் ஆய்வாளர் புருஷோத்தமன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மலரஞ்சலி செலுத்திய பின் அனைவரும் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையாளர்கள் முனைவர் ஆர்.தினகரன், ஏ.அருண், மருத்துவர் என்.கண்ணன், (போக்குவரத்து), இணை ஆணையாளர்கள் ஏ.ஜி.பாபு, (தெற்கு மண்டலம்), எஸ்.லஷ்மி, (போக்குவரத்து/தெற்கு), துணை ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.