சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் ரூ. 43.92 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் – ஒருவர் கைது

விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, ஃபிளை துபாய் எஃப் இசட் 8517 விமானம் மூலம் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கிய சென்னையை சேர்ந்த திருவெடத்து கனி, புதுக்கோட்டையை சேர்ந்த முகமது நியாஸ் ஆகியோர் விமான நிலையத் தில் இருந்து வெளியே செல்லும் வழியில் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர். கனியை சோதனை செய்து பார்த்தபோது, ரூபாய் 28.75 லட்சம் மதிப்புடைய 565 கிராம் தங்க பசை கொண்ட நான்கு பொட்டலங்கள் அவரது உடலில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. அவர் கைது செய்யப்பட்டார். நியாசை சோதனை செய்து பார்த்தபோது, ரூபாய் 15.17 லட்சம் மதிப்புடைய 298 கிராம் தங்க பசை கொண்ட நான்கு பொட்டலங்கள் அவரது உடலில் இருந்து கண்டெடுக்கப் பட்டன. மொத்தம் ரூ 43.92 லட்சம் மதிப்புடைய 863 கிராம் 24 கேரட் தங்கம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது என்று செய்திக் குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் தெரிவித்து ள்ளார்.