ஜனவரி 2021 ல் ரஜினிகாந்தின் புதிய கட்சி உதயம்: தமிழகத்தை மாற்றுவோமென்கிறார் ரஜினி

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நவம்பர் 30ந் தேதி ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினிகாந்த், “அரசியல் கட்சி தொடங்குவது குறித்து மாவட்ட நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். நான் எடுக்கும் எந்த முடிவுக்கு அவர்கள் கட்டுப்படுவதாக தெரிவித்தனர்.  அரசியல் பிரவேசம் குறித்த எனது முடிவை எவ்வளவு விரையில் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விரைவில் அறிவிப்பேன்” என ரஜினி பேட்டியளித்திருந்தார். இந்த நிலையில் இன்று டிசம்பர் 3ஆம் தேதி தன் அரசியல் பிரவேசத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழகத்தில் நேர்மையான, ஊழலற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம், இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல. அற்புதம்.. அதிசயம்.. நிகழும் இவ்வாறு ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.