தலைமைச் செயலக காலனி பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது. 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்.

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக் கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணை யாளர் மகேஷ் குமார்அகர்வால் உத்தர விட்டதின்பேரில், காவல் ஆய்வாளர் கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர் களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, G-5 தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், 12.1.2021 அன்று அயனா வரம் மேடவாக்கம் டேங்க் ரோடு சிக்னல் அருகே காவல் குழுவினர் கண்காணித்த போது, அங்கு ஒரு நபர் ரகசியமாக கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதன் பேரில், மேற்படி இடத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்றுக் கொண்டிருந்த மணிமாறன், வ/21, த/பெ.அசோக்குமார், எண்.61/20, மதுரை பிள்ளை தெரு, அயனாவரம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1.1 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட குற்றவாளி மணிமாறன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.