துணைமுதல்வருடன் கருணாஸ் சந்திப்பு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சருமான திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களை, அவரது இல்லத்தில் 10.10.2020 – சனிக் கிழமை முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவரும், திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான  கருணாஸ்  நேரில் சந்தித்து,
27.10.2020 அன்று மருது சகோதரர்களின் ஜெயந்தி தினம் அனுசரிக்கப்பட இருப்பதை யொட்டியும்; 30.10.2020 அன்று பசும்பொன் உ. முத்துராமலிங்க தேவர் திருமகனார் 113-ஆவது ஜெயந்தி விழாவையொட்டியும், கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக, தமிழக அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு கோரிக்கை மனு அளித்தார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை, அவரது இல்லத்தில் 10.10.2020 – சனிக் கிழமை அன்று கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.