த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் “யாமா”

ஸ்ரீ சிவன்யா கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பில்  செந்தில் குமார் இராஜேந்திரன் வழங்கும் யாமா திரைப்படம் விறுவிறுப்பான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குனர் சையத் இயக்கியுள்ளார். நாயகனாக விஜு இப்படத்தில் அறிமுகமாகிறார். கதாநாயகியாக லக்ஷ்மி பிரியா சந்திர மௌலி நடித்துள்ளார். “அங்காடித் தெரு” “அசுரன்” ஆகிய படங்களில் நடித்த இயக்குனர்  A.வெங்கடேஷ் எதிர்நாயகனாக நடித்துள்ளார். மேலும் எஸ்.சக்திவேல் ஒளிப்பதிவில் எல்.வி.முத்து கணேஷ் இசையில் இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் “யாமா” திரைப்படத்தின் தலைப்பும் முதற்பார்வையும் வெளியாகவுள்ளது. மக்கள் தொடர்பு: பிரியா.