நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று – ஐதராபாத் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. ஏழை முதல் பணக்காரர்கள் இந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கோடிகளில் சிகிச்சைக்கு பணம் கொடுத்தாலும் பணக்காரர்களே இதன் பாதிப்பால் உயிரை இழந்துள்ளனர். பாடகர் எஸ்பிபி, தொழிலதிபர் வசந்தகுமார், அரசியல்வாதி ஜெ.அன்பழகன் உள்ளோட்டோர் அண்மையில் மரணமடைந்தனர். பாலிவுட்டில் நடிகர் அமிதாப்பச்சன் குடும்பத்தினர், இயக்குநர் ராஜமவுலி உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தனது பெற்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தமன்னா தெரிவித்திருந்தார். தற்போது நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து ஐதராபாத்தில் உள்ள மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.