அன்பை பற்றி அதிகம் பேசுகிற படம் “மெய்யழகன்”

ஜோதிகா சூர்யா தயாரிப்பில்  அன்பை பற்றி அதிகம் பேசுகிற படம் “மெய்யழகன்”.  இவ்வுலகில் வெறுப்பு என்பது பழகி போன ஒன்றாகி விட்டது.  மிதமான அன்பையே அழுத்தி சொல்லியாக வேண்டும் என்கிற நிலையில் நாம் இருக்கிறோம். அன்பாக இருக்கிறவர் பிழைக்கத் தெரியாதவர் என்கிறார்கள்..! எல்லா உணர்ச்சிகளுக்கும் தாயுணர்வு அன்புதான். அன்பாக இருப்பது எவ்வளவு அழகான விஷயம்னு சொல்றதுதான் இந்த மெய்யழகன். இதை ஒரு வாழ்க்கையாகத்தான் பார்க்கிறேன். வாழ்க்கை தான், நாம் யோசிக்கவே முடியாத சினிமா. இலக்கியமும் சினிமாவும் தான்  மனிதனை அன்பால் தொடுகிறது.  சினிமாவின் மொழி எப்பவும் எளிமையானது. இன்னும் நம் கண்ணுக்கு கட்டுப்படாத பிரியங்களின், கரிசனங்களின் குவியல்தான் இந்த மெய்யழகன். இங்கே காதலும் வீரமும் இருக்கத்தான் செய்கிறது, அன்பு என்பது இல்லாது போகும் காலகட்டத்தில் இருக்கோம். ஆனால் அன்பே உருவாக இருக்கக்கூடியவர்களும் இருக்றார்கள். எனக்காகவும் உங்களுக்காகவும் முகம் தெரியாத யார் யாரோ அவங்களால் முடிந்த அன்பை காட்டுவதால் தான் இந்த உலகம் இன்னும் உயர்ந்திருக்கிறது. **********

சிலரால் அன்பு செலுத்தாமல் இருக்க முடியாது என்பதுதான் உண்மை. அப்படி எல்லோராலும் இருக்க முடிந்தால் இங்கே குற்றங்களும் குழப்பங்களும் அன்பால் குறையும்.  என்னுடைய ‘96’ படம் காதல் படம் இல்லை. அதுவும் அன்பை போதிப்பது தான். அதில் ரொமான்ஸ் கிடையாது. அன்போட முதல் புள்ளியாக 96ஐ வைத்துக் கொண்டால் ‘மெய்யழகன்’ இரண்டாவது புள்ளி. மக்கள் வெறுப்புக்கு பழகிட்டாங்க. எல்லோரையும் சேர்த்தே சொல்றேன். அன்பை நயமா கலைநயமா நுண்ணறிவோட சொல்ல முடிந்தால் நல்லதுன்னு நினைச்சேன். நாமளும் அன்பை விதைக்கிறதுக்கான முயற்சி தான் என் முதல் வேலை. மத்ததெல்லாம் அப்புறம்தான். அப்படி ஒரு நல்ல முயற்சியாக மெய்யழகன் இருக்கும்.

அரவிந்த்சாமி வந்து நின்னாலே கம்பீரம் ஆளுமை வேணுங்கிற மாதிரி ஒரு இடத்தில் வரணும். ரொம்பவும் பேசாத வாழ்க்கையில் ஒரு பெரும் துயரத்தை பார்த்துவிட்டு அதிலிருந்து மீள முடியாமல் அமைதியானவர். உள்ளுக்குள்ளே பெரிய அன்பிருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் தனக்குள்ளே தன்னை அடக்கிக் கொண்ட கேரக்டர். யாரையும் அதிகம் நம்பாமல் நம்மையே நாம் பார்த்துக்கணும்னு நினைக்கிறவர் அரவிந்த்சாமி. ஒரு இழப்பின் காரணமாக இப்படி மாறியிருப்பார். அவர் அழகு, நிறம், ஆளுமை மட்டுமில்லை அவர்கிட்டே பேராண்மையும் சேர்ந்திருக்கும். அது அவருக்கு அவ்வளவு பொருத்தமாக இருக்கும். ஃபேமிலியில் ஒரு மூத்த அண்ணன் மாதிரி இருந்தார்.

ராஜ்கிரண், அரவிந்த்சாமியோட தாய் மாமன். கார்த்திக்கு பெரியப்பா. ரொம்ப சென்டிமென்ட் ரோல். அவரோடு காமெடியான ரோலும் இணைஞ்சிருக்கு.  தேவதர்ஷினி அரவிந்த்சாமியின் ஜோடி. அவங்களோட பெஸ்ட் ரோல் இது. கிட்டத்தட்ட ஒரு ஹீரோயின் இடம் இருக்கு. கார்த்திக்கு இணை ஸ்ரீதிவ்யா. வெள்ளந்தியான கணவனை விட்டுத் தராமல் அவனை அப்படியே ஏத்துக்கிற மனைவி. கருணாகரன் ஒரே ஒரு சீனில் கண்டக்டர் ரோலில் வருவார். கதையின் திருப்பமே அங்கேயிருந்து தான் ஆரம்பிக்கும். ஜே.பி சார் அரவிந்த்சாமியின் அப்பாவாக நடிச்சிருக்கார்.  மேலும், சுவாதி கொண்டே,  ஶ்ரீரஞ்சனி, இளவரசு, சரண், ரேச்சல் ரெபேகா, அந்தோணி, ராஜ்குமார், இந்துமதி,  ராணி சம்யுக்தா, கயல் சுப்ரமணி, அசோக் பாண்டியன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.  கேமரா மகேந்திரன் ஜெயராஜூ.  படத்தின் இன்னும் அசல் முகம் வேண்டி லைவ் சவுண்ட்தான் படத்தில் உபயோகப்படுத்தியிருக்கோம்.கோவிந்த வசந்தாவின் மியூசிக் இதில் ஊர் விருந்து மாதிரியிருக்கும். அப்படியே மனதை தட்டி தூக்கிட்டார். கதை சூழல் தெரியாமல் கேட்டவங்க கூட அழுதாங்க. கண்களில் தாரைதாரையாக கண்ணீர் கொட்டியது. ‘மெய்யழகன்’ – உங்கள் சொந்த ஊரை ஞாபகப்படுத்துவான். நாம் பேச வேண்டாம்ன்னு நினைச்சவங்க கிட்ட மன்னிப்பு கேட்க தோணும்.  படத்த பார்த்துட்டூ உங்ககிட்டே இருக்கிற அன்பு வெளிப்படும்.

தயாரிப்பு: 2D entertainment  தராரிப்பாளர்: ஜோதிகா மற்றும் சூர்யா இணை தயாரிப்பு: ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன் ஒளிப்பதிவு: மகேந்திரன் ஜெயராஜு, எடிட்டிங்: ஆர்.கோவிந்தராஜ், புரொடக்‌ஷன் டிசைனர்: ராஜீவன், ஆர்ட்: ஐயப்பன்,  பாடல்கள்: கார்த்திக் நேத்தா – உமாதேவி. செப்டம்பர் 27 வெளியீடு.

மகக்ள் தொடர்பு ஜான்சன்.