கட்டப்பஞ்சாயத்து கந்து வட்டிக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை பாயுமென தமிழக காவல்த்துறை தலைவர் எச்சரிக்கை

தமிழக காவல்த்துறை இயக்குநர் சி.சைலேந்திரபாபு ,
மதுரை மாநகர் காவல் துறை அலுவலகத்தில் தென் மண்டல காவல் துறை உயர் அதிகாரிளுடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் மதுரை மாநகர காவல் ஆணையாளர், தென்மண்டல காவல் துறை தலைவர் மற்றும் காவல் ஆணையர், திருநெல்வேலி மாநகர், மதுரை, ராமநாதபுரம்
திண்டுக்கல் , திருநெல்வேலி சரக காவல் துறை துணைத்தலைவர்கள் , மதுரை , விருதுநகர் , திண்டுக்கல் , தேனி , ராமநாதபுரம் , சிவகங்கை , திருநெல்வேலி , தென்காசி , தூத்துக்குடி , கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் மதுரை மாநகர காவல் துணை ஆணையர்களும் கலந்து கொண்டனர் .

தென் மண்டலத்தில் ரவுடிகள் மோதும் சில சம்பவங்கள் நடந்துள்ளன . ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் கடுமையான சட்டங்கள் மூலம் அவர்களை தண்டிக்க ஆலோசனை வழங்கினார்.

ரவுடிகள் மீது உள்ள பழைய வழக்குகளை துரிதப்படுத்தி , அவர்களுக்கு அதிகபட்ச தண்டணை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்து . ரவுடிகளை சிறையிலடைக்க அறிவுரை வழங்கினார்.  கட்டப்பஞ்சாயத்து , கந்துவட்டி ,   கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர்களை தரம்பிரித்து அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். மதுரை மாநகரில் ஆயுதம் ஏந்திய இருச்சக்கர ரோந்து காவலர்களின் சிறப்பான பணியை பாராட்டினார். சிறப்பாக பணியாற்றிய ஆயுதம் ஏந்திய காவலர்கள் முதல்நிலை காவலர் மாரிமுத்து , ஆயுதப்படை காவலர் 3123 காக்கரமுத்து , முதல்நிலை காவலர் செந்தில் . ஆயுதப்படை காவலர் 2610 வெங்கடேஸ் பாபு , முதல்நிலை காவலர்  சுந்தரமூர்த்தி , ஆயுதப்படை காவலர் கண்ணதாசன் , முதல் நிலை காவல் செல்வக்குமார் . மதுரை மாவட்ட காவல் துறையை சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளா முத்துகிருஸ்ணன் , சார்பு ஆய்வாளர் திரு.குமரகுரு , தலைமை காவலர் பாலசுப்பிரமணி , தலைமை காவலர் தார்வின் , தலைமை காவலர் முருகன் , தலைமை காவலர்  பிரகாஸ் மற்றும் சார்பு ஆய்வாளர் கே.ஆனந்த் , தலைமை காவலர் ராமர் , தலைமை காவலர் ஆசைத்தம்பி , முதல் நிலை காவலர் பிரகாஸ் மற்றும் காவலர் நாகேஸ்வாரன் ஆகியோருக்கு தலா ரூ 5000 / வெகுமதி வழங்கி அவர்களது பணியை பாராட்டினார். கொரோனா மற்றும் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள தேனி மாவட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜோதிராஜ் குடும்பத்திற்கு உதவி தொகையாக ரூ 50000 / ஐ அவரது மகளிடம் வழங்கினார் .

முன்னதாக மதுரை மாநகர காவல் துறை அலுவலகத்திற்கு வருகை புரிந்த காவல் துறை இயக்குநர் தமிழ்நாடு அவர்களுக்கு மதுரை மாநகர காவல் துறை சார்பாக ஆயுதப்படை காவலர்களின் மரியாதை வழங்கப்பட்டது .