ஒன்றரை வருடத்திற்குப் பிறகு மதுரையிலிருந்து இலங்கைக்கு விமான சேவை தொடங்கியது

கொரோனா முதல் அலை காரணமாக கடந்த 2020- ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மதுரைவிமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. 1½ வருடத்திற்கு பின் தற்போது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொழும்புவில் இருந்து 38 பயணிகள்நேற்று மதுரை விமான நிலையம் வந்தனர்மதுரை விமான நிலையத்தில் உள்ள சுகாதார துறைஅதிகாரிகள் மூலம்விமானத்தில் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதுஇதேபோல் மதுரையில் இருந்து இலங்கைக்கு 76 பயணிகள் அதே விமானத்தில் புறப்பட்டு கொழும்புசென்றனர்கொரோனா பரிசோதனை சான்று மற்றும் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே விமானத்தில்செல்ல அனுமதிக்கப்பட்டனர்வாரத்தில் திங்கட்கிழமை மட்டுமே இந்த விமான சேவை உள்ளதுஅதன்படிஇலங்கையில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் விமானம் காலை 9.15 மணிக்கு மதுரைவந்தடையும்மீண்டும் 10.15 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கு இலங்கை சென்றடையும் என அதிகாரிகள்தெரிவித்தனர்