2022-23-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை “மக்களின் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை” – முதல்வர் ஸ்டாலின்

வார்த்தை அலங்காரங்கள் நிறைந்த ஒன்றிய பா... அரசின் வழக்கமான நிதிநிலை அறிக்கையாகவே இந்த2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையும்அமைந்திருக்கிறது. “தனிநபர் வருமான வரி விகிதத்தில்எவ்வித மாற்றங்களும் இல்லை” – “மூன்று வேளாண்சட்டங்களை எதிர்த்துப் போராடி உயிர் நீத்த உழவர்களுக்குநலத் திட்டங்கள் இல்லை” – “தமிழ்நாடு அரசின் சார்பில்ஒன்றிய அரசிடம் கோரிய திட்டங்களுக்கு நிதியுதவிஇல்லைகுறிப்பாக தமிழ்நாட்டிற்கான புதிய ரயில்திட்டங்களும் இல்லை” – “மழை வெள்ளம் உள்ளிட்டஇயற்கை பேரிடர்களுக்கு கோரிய நிவாரண நிதி ஒதுக்கீடும்இல்லைஎன ஒரு நிதிநிலை அறிக்கையை, மாண்புமிகுஒன்றிய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள்தாக்கல் செய்திருப்பது தமிழ்நாட்டிற்கும்தமிழ்நாட்டுமக்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கோதாவரிபெண்ணாறுகாவிரி நதிநீர் திட்டத்தின்விரிவான அறிக்கை மட்டுமே தயார் என்ற அறிவிப்புஇருப்பது ஆறுதல் அளித்தாலும்அறிவிப்பினைசெயல்படுத்த முதல் கட்ட நிதி ஒதுக்கீட்டினைக் கூடநிதிநிலை அறிக்கையில் காண முடியவில்லை என்பதுகவலையளிக்கிறது. ஏற்கனவே தமிழ்நாட்டிற்குஅறிவிக்கப்பட்ட இராணுவ பெருவழித் திட்டத்திற்கு நிதிஒதுக்கப்படவில்லை என்பதால்இத்துறையிலும் தமிழ்நாடுபுறக்கணிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத்திட்டத்தினைப் பேரூராட்சிப் பகுதிகளுக்கும் நீட்டிக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வரும்நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீட்டினை 25 ஆயிரம் கோடிரூபாய் அளவிற்குக் குறைத்திருப்பது, ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டத்தைமுடக்குவதற்கான முயற்சியாக மட்டும் தெரியவில்லை; அடித்தட்டு மக்களின் கையில் ஒரு பைசா கூட இருக்கக்கூடாது என்ற எண்ணவோட்டத்தையே வெளிப்படுத்துகிறது.

கூட்டுறவு கூட்டாட்சியின்அடிப்படையில்மாநிலமூலதன முதலீடுகளுக்காக 1 லட்சம் கோடி ரூபாய்ஒதுக்கீடுஎனக்கூறிமாநிலங்களுக்கு நிதி அளிக்கப்போவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினாலும்இந்த நிதிஒதுக்கீடு முக்கியமாக பிரதமரின்கதிசக்திதிட்டத்திற்கேபயன்படுத்தப்படும் என்பதுமாநிலத்தின் பெயரைச் சொல்லிநிதி ஒதுக்கி ஒன்றிய அரசே தனது திட்டங்களுக்குபயன்படுத்திக் கொள்ளும்விதமான நிதி ஒதுக்கீடாகவேகாட்சியளிக்கிறது. இந்த ஒரு லட்சம் கோடி ரூபாயும்மாநிலங்களுக்கு நிபந்தனைகளின்றி பகிர்ந்துஅளிக்கப்படும் விதத்தில் நிதிநிலை அறிக்கை அறிவிப்புஅமைந்திருந்தால் நானே முதலில் வரவேற்று இருப்பேன். ஆனால் அந்த நிதி ஒதுக்கீடு செய்வதற்குப் பல்வேறுநிபந்தனைகளை உருவாக்கி இந்த நிதி உரிய வகையில்மாநில அரசுகளுக்குக் கிடைக்காதவாறு செய்திருப்பதுமாநில அரசுகளுக்கு எந்தவகையில் உதவும்?

பருவநிலை மாற்றத்தைப் பற்றி பிரதமரே பன்னாட்டுகருத்தரங்குகளில் வாக்குறுதி அளித்து விட்டுஅந்தத்திட்டங்களைச் செயல்படுத்த முன்வரும் மாநிலங்களுக்குஇதற்காக எவ்வித புதிய அறிவிப்புகளோ, போதிய நிதிஒதுக்கீடோ இல்லாத நிதிநிலை அறிக்கையாக இதுஅமைந்துள்ளது. அதேபோல் “One Nation One Registration” என்று மாநில அரசின் உரிமைகளில் தலையிடும் திட்டத்தைநிதியமைச்சர் அறிவித்திருப்பதுஎந்த அறிவிப்பினைச்செய்தாலும் மாநில உரிமைகளை எப்படிப் பறிப்பதுஎன்பதை மட்டுமே ஒன்றிய அரசு கவனத்தில் கொண்டுசெயல்படுவதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

கொரோனா பெருந்தொற்று தாக்கத்தால் ஏற்பட்டவாழ்வாதாரபொருளாதார இழப்பில் இருந்து மக்களைமீட்கும் நலத் திட்டங்கள்” – “நேரடி பண உதவி” – “சிறு குறுமற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்கும்திட்டங்கள்ஆக்கபூர்வமான மானியங்கள்போன்ற எதுவும்இல்லை. மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறைநிலைமையை எதிர்கொள்ள ஒன்றிய அரசு எவ்விதமுயற்சியும் எடுக்கவில்லை என்பதோடு – 2022-23-ஆம்ஆண்டிற்கு மாநில அரசுகளுக்கு மொத்த நிதிப்பற்றாக்குறைவரம்பு 4 விழுக்காடு எனச் சென்ற ஆண்டைக் காட்டிலும்குறைக்கப்பட்டுள்ளது.  இதில், மின்துறையில்சீர்திருத்தங்களை மேற்கொண்டால் மட்டுமே 0.5 விழுக்காடுஅனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுஉழவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தைச்செயல்படுத்தும் தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்குப் பெரியநெருக்கடியை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.இக்கட்டான இந்த நிதிச் சூழலில் எந்தவொருநிபந்தனையும் இல்லாமல் குறைந்தபட்சம் 5 விழுக்காடுநிதிப்பற்றாக்குறை வரம்பை மாநில அரசுகளுக்குஅனுமதித்திருக்க வேண்டும்.

சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுத் தொகை30.6.2022 உடன் நிறைவடையும் சூழலில்இத்தொகைவழங்குவதை தொடர வேண்டும் என்ற மாநில அரசுகளின்கோரிக்கையை புறக்கணித்திருப்பது ஒன்றியமாநிலஅரசுகளின் நல்லுறவிற்குக் கை கொடுக்க மறுக்கும் ஒன்றியஅரசின் பெரியண்ணன் மனப்பான்மையையே காட்டுகிறது. சுருங்கச் சொன்னால், மக்களுக்கு நம்பிக்கையூட்டும்திட்டங்களை அளிக்க மறந்து –  ுறிப்பாக 5 மாநிலத்தேர்தல் நடைபெறும் சூழலில் தங்களுக்கு ஏதாவது நல்லஅறிவிப்பு கிடைக்காதா என ஏங்கித்தவித்த மக்களின்எதிர்பார்ப்பைப் புறக்கணித்துமக்களைப் பற்றிசிந்திக்காத இந்த நிதிநிலை அறிக்கையைமக்களின்நலனை மறந்த நிதிநிலை அறிக்கைஎன்றுஅடைமொழியிட்டு அழைப்பதே முற்றிலும் பொருத்தமானது.