கலையியல் அறிவுரைஞராக ஜாகிர் உசேன் பதவியேற்பு

கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளிகளுக்கான கலையியல் அறிவுரைஞராக முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட பிரபல பரதநாட்டிய கலைஞர் அ.ஜாகிர் உசேன் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள கலை பண்பாட்டுத்துறை அலுவலகத்தில் பதவி ஏற்றுக் கொண்டார். திமுக தலைமை நிலைய செயலாளரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவருமான பூச்சி எஸ். முருகன், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ நா.எழிலன் மற்றும் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.