உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தினார்

23-02-2022 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின்தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு..ஸ்டாலின், சென்னைஅண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில், காலையும் மாலையும் ஆறுமணிநேரத்திற்கும் மேலாக நின்றுகொண்டே, உள்ளாட்சி நகர்ப்புறத் தேர்தலில் வென்ற மக்கள் பிரதிநிதிகளையும், அவர்தம் உறவினர்கள் மற்றும் அவர்களது வெற்றிக்காகஉழைத்த கழக உடன்பிறப்புகள் ஆகியோரையும் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டு வாழ்த்தினார்.​ 

 

 

 

 

இதுகுறித்து அவர்   பகிர்ந்துகொண்ட சமூக வலைத்தள பதிவில்,  “முப்பதுக்கும் மேற்பட்ட கழக மாவட்டங்களைச் சேர்ந்தவெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள்அவர்களதுகுடும்பத்தினர், வெற்றிக்காக உழைத்த கழகஉடன்பிறப்புகள் என ஆயிரக்கணக்கானோர் என்னைச் சந்தித்து வெற்றிக் களிப்பைப் பகிர்ந்து கொண்டனர்உடன்பிறப்புகளின் முகத்தில் ஏற்படும் மலர்ச்சியையும் மனதில் ஏற்படும் மகிழ்ச்சியையும் காணும்போது கால் வலியும் உடல் அயர்ச்சியும் சூரியனைக் கண்ட பனிபோல் விலகுகிறதுவிடியலில் முளைத்த சூரியக் கதிர்களை வாழ்த்தினேன்”. என்று பதிவிட்டுள்ளார்.