” சிட்தி ” விரைவில் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது

சூர்யா பிலிம் புரொடக் ஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக  திரு.மகேஷ்வரன் நந்தகோபால் அவர்கள் தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாரித்துள்ள படம் ‘சிட்தி’ இந்த படத்தை பயஸ் ராஜ்  எழுதி இயக்கியுள்ளார். அஜி ஜான் கதாநாயகனாக நடித்துள்ளார். அக்ஷயா உதயகுமார் மற்றும் ஹரிதா  கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். முக்கிய வேடத்தில் ஐ.எம்.விஜயன்,  ராஜேஷ் சர்மா, ஹரி கிருஷ்ணன்,  சிஜீ லால், வேணு மரியாபுரம்,  சொப்னா பிள்ளை,  மதுவிருத்தி,  திவ்யா கோபிநாத்,  தனுஜா கார்த்தி ஆகியோர் நடித்துள்ளார்கள். ************

ஒளிப்பதிவு : கார்த்திக் S. நாயர் இசை : ரமேஷ் நாராயணன் வசனம் : சீனிவாச மூர்த்தி  பாடல்கள் : சினேகன், மலர் வண்ணன்.  எடிட்டிங் : அஜித் உன்னிகிருஷ்ணன் நடனம் : சாமி பிள்ளை  ஸ்டண்ட் : பவன் சங்கர்  கலை : பெனித் பத்தேரி  மக்கள் தொடர்பு : மணவை புவன் தயாரிப்பு :மகேஷ்வரன் நந்தகோபால்  தயாரிப்பு நிறுவனம் : சூர்யா பிலிம் புரொடக் ஷன்ஸ். எழுத்து – இயக்கம் : பயஸ் ராஜ் 

படம் குறித்து இயக்குநர் பயஸ் ராஜ் கூறியதாவது : 
 
“இது சற்றே வித்தியசமான  கிரைம் திரில்லர் ஜானர். வைலன்ஸ் இல்லாத பாப்கார்ன் திரில்லர் இது.  சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவன் ” சிட்தி ” தவிர்க்க முடியாத சூழ்நிலையில்  கொலையாளியாக மாறுகிறார். அவர் ஏன் கொலையாளியாக மாறினார் ? இறுதியில் என்ன நடந்தது ? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியுள்ளோம். இன்றைய சமூகத்தில் நடக்கும் உண்மை சம்பவங்களை வைத்துதான் சிட்தியை உருவாக்கியிருக்கிறோம்.படம் பார்த்த பிறகு சிட்தி போன்ற ஒரு ஆள் நிச்சயம் நம் சமூகத்திற்கு தேவை என்று அனைவரும் சொல்வார்கள். I.M. விஜயன் கூலான போலீஸ் ஆபீஸராக கலக்கியிருக்கிறார். ஹிந்துஸ்தானி இசையமைப்பாளர் ரமேஷ் நாராயணன் இதுவரை தராத இசையை இந்த படத்திற்கு கொடுத்திருக்கிறார். பாடல்களையும் பின்னணி இசையையும் கேட்டவர்கள் இது அவரது இசைதான் என்பதை நம்பவில்லை அப்படி ஒரு வித்தியாசமான இசையை தந்துள்ளார். அது இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். மிக அற்புதமான பாடல் வரிகளை சினேகன் இந்த படத்திற்கு கொடுத்திருக்கிறார்.
 
இதன் படப்பிடிப்பு முழுவதும் கேரளாவின் எழில் மிகுந்த எர்ணாகுளம், கொச்சி, திருவனந்தபுரம் போன்ற இடங்களில் 35 நாட்கள் இரவு பகலாக ஒரே கட்டமாக நடைபெற்றது. நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் என சிறப்பாக வந்துள்ள சிட்தி திரைப்படம் விரைவில் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது.