பொதுமக்கள் வீடுகளுக்கே சேரில் சென்று காவல்த்துறையினர் ஆலோசணை

சென்னை பெருநகரில் குற்றங்களை குறைக்கவும், குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் மற்றும் பொதுமக்கள் காவல் துறை நல்லுறவை மேம்படுத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  சங்கர் ஜிவால்இ.கா.ப., உத்தரவிட்டதின்பேரில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்டபகுதிகளில் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் குற்ற தடுப்புநடவடிக்கையாக மக்கள் அதிகம் வசிக்குமிடங்களில் உள்ள குடியிருப்போர் நலசங்க நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடி குற்றங்கள் நடவாமல் தடுப்பதற்கு தகுந்தமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த 16.04.2022 அன்று சென்னை பெருநகர் காவல் சரகஎல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் குழுவினர் குடியிருப்போர்நலச்சங்க நிர்வாகிகளை சந்தித்து காவல் துறை மற்றும் பொதுமக்களிடைய நல்லுறவு ஏற்படும்விதமாக கலந்துரையாடினர். வடக்கு மண்டலத்தில் 17 இடங்களில் குடியிருப்பு நலச்சங்கநிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட  கலந்துரையாடல் கூட்டத்தில்  579  பொதுமக்களும், மேற்குமண்டலத்தில்  44 இடங்களில்  நடத்தப்பட்ட கலந்துரையாடல் கூட்டத்தில்  1040 பொதுமக்களும்,  கிழக்கு மண்டலத்தில் 23 இடங்களில் நடத்தப்பட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் 537 பொதுமக்களும், தெற்கு மண்டலத்தில் 55 இடங்களில் நடத்தப்பட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் 1680 பொதுமக்களும்  என   மொத்தம்  நான்கு மண்டலங்களிலும்  139 இடங்களில்நடத்தப்பட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் 3,836 பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இக்கலந்துரையாடல் கூட்டத்தில், குற்றத்தடுப்பு நடவடிக்கையாக குடியிருப்பு மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவவும், அதன் உபயோகம் பற்றியும்எடுத்துரைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்களை அமைக்க பொதுமக்கள் முன்வரவேண்டும் எனகேட்டுக்கொள்ளப்பட்டது, தனியாக வசிக்கும் முதியோர்கள் பற்றிய விபரங்கள் மற்றும் பூட்டியவீடுகள் குறித்த தகவல்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிப்பதன் அவசியம் குறித்துஎடுத்துரைக்கப்பட்டது.  

மேலும் தேவைப்படும் இடங்களில் காவலாளிகள் நியமிக்கவும் வலியுறுத்தப்பட்டது. பொதுமக்கள்வாகனங்களை சாலையில் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்றும், குடியிருப்பில் அவசியமின்றி யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.மேலும் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து ஏதாவது, சந்தேக நபர்கள், குற்றச்சம்பவங்கள் பற்றிதகவல் தெரிந்தால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கும்படியும்காவல் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள அவர்களுக்கு வழங்கினர். குடியிருப்பு நலசங்கநிர்வாகிகள் காவல் துறையினரின் அறிவுரைகளை கேட்டு நடப்பதாகவும், தங்களது பகுதிகளில்ரோந்து பணிகளை அதிகப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். இது போன்றுபொதுமக்களுடன் கலந்துரையாடல் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு விழிப்புணர்வுஏற்படுத்தப்படும்.