பெண்களை சந்தைப் பொருளாக்க சொல்கிறாரா? வி.3.படத்தின் இயக்குநர்

அமுதவாணன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் வி.3. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஆடுகளம் நரேன், பாவனா நடித்திருக்கிறார்கள். பாவனாவை அரசியல் அதிகாரம் படைத்த மூன்று இளைஞர்கள் கூட்டு பலாத்காரம் செய்து கற்பழித்து விடுகிறார்கள். வழக்கை முடிக்க, அப்பாவி மூன்று இளைஞரகளை குற்றவாளிகளாக்கி சுட்டு கொல்கிறார் போலீஸ் அதிகாரி. கற்பழித்த மூன்று பணக்கார இளைஞர்களும் நிரபாரதிகள் என்று நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்கிறது. இதுதான் கதை. இதுபோன்ற கற்பழிப்புகள் இனி நடக்காமலிருக்க வேண்டுமென்றால், விபச்சாரத்தை சட்டப்பூர்வமான தொழிலாக அரசு அறிவிக்க வேண்டும் என்று கதையை முடிக்கிறார் இயக்குநர் அமுதவாணன். அதாவது பெண்களை சந்தைப் பொருளாக்க வேண்டுமென்கிறாரா?.