கொலைகார கூட்டம் “தலைக்கூத்தல்”

சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் “தலைக்கூத்தல்”. தமிழ்நாட்டிலுள்ள சில கிராமங்களில் நோய் வந்து படுத்துக்கிடக்கும் முதியவர்களை கருணைக் கொலை செய்யும் பழக்கத்தை சித்தரிக்கும் படம்தான் தலைக்கூத்தல். சமுத்திரக்கனியின் வயதான தந்தை செயலிலந்து படுத்த படுக்கையாக கிடக்கிறார். படுக்கையிலேயே மலம் கழிக்கிறார் தந்தை, மலத்தை அள்ளி அவரை குளிப்பாட்டி கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்கிறார் சமுத்திரக்கனி. ஆனால் அவரின் மனைவி மாமா மைத்துனர் ஊர் ஜனங்கள் ஆகியோர் தந்தையை கருணைக் கொலை செய்ய சமுத்திரக்கனியை வற்புறுத்துகிறார்கள். சமுத்திரக்கனியின் பாசமிகு நடிப்பால் அனைவரின் கைத்தட்டலையும் அள்ளுகிறார். உச்சக்கட்ட காட்சியில்,  இளைஞர்களின் இதயத்தில் ரோஜா மலருக்கு பதிலாக கள்ளிச் செடியை சொருகியிருக்கிறார் இயக்குநர்*******