சிறந்த காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள்உத்தரவின்பேரில், காவல் ஆளிநர்களை ஊக்குவிக்கும் வகையில், திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்து களவுப் பொருட்களை மீட்ட காவல் ஆளிநர்கள், குற்றசம்பவங்களின்போது, விரைந்து செயல்பட்டு குற்றவாளிகள. கையும் களவுமாக கைது செய்யும் காவல் ஆளிநர்கள், ரோந்துவாகன காவல் குழுவினர்கள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்யும் காவல் அதிகாரிகள் மற்றும்ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள்நேரில் அழைத்து அவர்களது பணியைப் பாராட்டி வெகுமதி மற்றும்சான்றிதழ்கள் வழங்கி வருகிறார்.**********

1. கோட்டூர்புரம் பகுதியில் உள்ள பூட்டிய வீட்டில் சுமார்450 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில்வெளிமாநில குற்றவாளிகளின் கைரேகைகள் ஒப்பீட்டுபார்க்கப்பட்டு குற்றவாளி அடையாளம்காணப்பட்டுள்ளார்.

கடந்த 11.08.2016 அன்று காலை கோட்டூர்புரம் பகுதியில்உள்ள ஒரு பூட்டிய வீட்டில் 450 சவரன் தங்க நகைகள்கொள்ளையடிக்கப்பட்டது குறித்து J-4 கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாணை மேற்கொள்ளப்பட்டுவந்தது. இந்நிலையில் மேற்படி வழக்கு கடந்த 12.04.2022ம் ஆண்டுCBCID விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் சென்னை விரல் ரேகைப்பிரிவு காவல் குழுவினர்சம்பவயிடத்தில் கிடைத்த 10 விரல் ரேகைப்பதிவுகளை வைத்துதமிழகத்தில் திருட்டு குற்றங்களில் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களின் விரல் ரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து விசாரணைசெய்ததில், எந்த விரல் ரேகைகளும் ஒத்துப்போகாததால், விரல்ரேகை பிரிவு உதவி ஆய்வாளர்கள் திரு.மேசையா அருள்ராஜ், திரு.S.வினோத் ஆகியோர் தேசிய விரல்ரேகை பதிவு கூடத்தில்பராமரிக்கப்படும் “National Automated Fingerprint Identification System” (NAFIS) என்ற மென்பொருள் உதவியுடன்வெளிமாநிலங்களைச் சேர்ந்த குற்றவாளிகளின் கைரேகைகளைஒப்பீட்டு பார்த்ததில், மேற்படி வீட்டில் சுமார் 450 சவரன்தங்கநகைகள் திருடிய வழக்கில் சம்பந்தப்பட்ட வெளிமாநிலகுற்றவாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். மேற்படிவழக்கில் குற்றவாளியை அடையாளம் கண்ட விரல் ரேகை பிரிவுஉதவி ய்வாளர்களுக்கு சென்னை பெருநகர காவல்ஆணையாளர் வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

 2. மதுரவாயல் பகுதியில் 3 டீக்கடைகளின் பூட்டைஉடைத்து திருடிய நபர் கைது. ரொக்கம் ரூ.1,140/- பறிமுதல்.

சென்னை, வானகரம், கந்தசாமி நகர், 3வது தெரு, எண்.182 என்ற முகவரியில் வசித்து வரும் ஜெயராமன், வ/44, த/பெ.சுப்பிரமணி, என்பவர் ஆலப்பாக்கம் பகுதியில் டீக்கடை நடத்திவருகிறார். கடந்த 10.02.2023 அன்று இரவு ஜெயராமன் தனதுகடையை பூட்டிவிட்டு மறுநாள் (11.02.2023) காலை வந்து பார்த்தபோது மேற்படி டீக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டுகல்லாவிலிருந்த பணம் ரூ.10,000/- திருடுபோனதுதெரியவந்துள்ளது. இதே போல அதே பகுதியில் மேலும் 2 டீக்கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருடுபோயிருந்ததுதெரியவந்துள்ளது. மேற்படி திருட்டு சம்பவங்கள் குறித்து மேற்படிடீக்கடைகளின் உரிமையாளர்கள் ஜெயராமன், காளிமுத்து மற்றும்ஜெயராமன் ஆகிய மூவர T-4 மதுரவாயல் காவல் நிலையத்தில்கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணைமேற்கொள்ளப்பட்டது.

சென்னை விரல்ரேகைப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்திரு.V.பஞ்சாட்சரம்,                 T-4 மதுரவாயல் காவல் நிலையகுற்றப்பிரிவு ஆய்வாளர் திரு.P.சீனிவாசன், உதவி ஆய்வாளர்திரு.S.சுதாகர், முதல் நிலைக்காவலர் திரு.D.தரசதன், (மு.நி.கா.37001), காவலர்கள் திரு.V.சக்திவேல் (கா.எண்.55692), திரு.அப்பு (கா.எண்.52642), ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர்காவல் குழுவினர் சம்பவயிடங்களுக்கு சென்று தீவிர விசாரணைசெய்தனர். மேலும் சம்பவயிடங்களில் பொருத்தப்பட்டிருந்தகண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்தும், சம்பவயிடங்களில்கிடைத்த கைரேகை பதிவுகளை வைத்தும் தீவிர விசாரணைசெய்து மேற்படி 3 திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட சரவணன், வ/49 த/பெ.சந்திரசேகர், எண்.17, 9வது குறுக்கு தெரு, தனசேகர்நகர், மதுரவாயல், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரொக்கம் ரூ.1,140/- பறிமுதல் செய்யப்பட்டது.   

3.எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் குற்றவாளிக்கு கஞ்சாகொடுக்க முயன்ற     3 நபர்களை கைது செய்தார்கள்.  D-2 அண்ணாசாலை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில்பணிபுரியும் முதல் நிலைக்காவலர் திரு.S.கோட்ராஜ்,(மு.நி.கா.28772) கடந்த 16.02.2023 அன்று மாலை எழும்பூர், 2வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றபணியிலிருந்த போது, அங்கு நீதிமன்றத்தில் வழக்குவிசாரணைக்கு ஆஜரான விசாரணை கைதியிடம், நீதிமன்றவளாகத்தில் இருந்த 3 நபர்கள் கஞ்சா கொடுக்க முயன்றுள்ளார். இதனை கண்ட மேற்படி முதல் நிலைக்காவலர் திரு.கோட்ராஜ்,கைதியிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்தும், கஞ்சா கொடுக்கமுயன்ற 3 நபர்களை பிடித்து F-2 எழும்பூர் காவல் நிலையத்தில்ஒப்படைத்தார்.

  F-2 எழும்பூர் காவல் நிலைய போலீசாரின் விசாரணையில்பிடிப்பட்ட நபர்கள  1.தனுஷ், வ/20, த/பெ.சீனிவாசன், ஜாம்பஜார், சென்னை 2.விக்னேஷ், வ/22, த/பெ.முருகன்ஜாம்பஜார், சென்னை 3.பிரேம், வ/23, த/பெ.சோமு, திருவல்லிக்கேணி,சென்னை அவர்களிடமிருந்து 10 கிராம் கஞ்சாபறிமுதல் செய்யப்பட்டது

4.2018ம் ஆண்டு T.P சத்திரம் பகுதியில் மனைவியைகொலை செய்த வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள்கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000/- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.

சென்னை, அண்ணாநகர் கிழக்கு, புது காலனி, 2வது தெரு, வ.உ.சி நகர்,  பகுதியில்  அம்மு, வ/23, க/பெ.சீனிவாசன் என்பவர்வசித்து வந்தார். கடந்த 27.08.2018 அன்று காலை அம்முவின்நடத்தையில் சந்தேகப்பட்டு அவரது கணவர் சீனிவாசன் என்பவர்மேற்படி அம்முவை கத்தியால் தாக்கி கொலை இது குறித்துகொலையுண்ட அம்முவின் தயார் சுந்தரி என்பவர் K-6 T.P.சந்திரம்காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்து எதிரி சீனிவாசன், வ/34, த/பெ.மாலக்கொண்டையா, வ.உ,சி நகர், புது காலனி, 2வது தெரு, அண்ணாநகர், சென்னைஎன்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்குஉட்படுத்தப்பட்டார்.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை அல்லிக்குளம், மகிளா நீதிமன்றத்தில் டைபெற்று வந்த நிலையில், K-6 T.P.சந்திரம்காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர்குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், நீதிமன்ற அலுவல்பணிபுரியும் பெண் காவலர் திருமதி.K.ராஜலெட்சுமி முறையாகசாட்சிகளை ஆஜர்படுத்தியும், வழக்கு நடவடிக்கைகள்தொடர்ச்சியாக கண்காணித்தும் வந்த நிலையில், நீதிமன்றநடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிவடைந்துஇவ்வழக்கில் கடந்த 15.02.2023 தீர்ப்பு வழங்கப்பட்டது.மேற்படிவழக்கில் எதிரி சீனிவாசன், வ/39, த/பெ.மாலக் கொண்டையாஎன்பவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5,000/- அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கனம்நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.

5.ஐஸ் அவுஸ் ஆதாய கொலை வழக்கில் சம்பந்தப்பட்டஇளஞ்சிறார் ஒருவரை     3 ஆண்டுகள் சிறுவர்கூர்நோக்கு இல்லத்தில் வைத்து கண்காணிக்கவும் மற்ற 3 இளஞ்சிறார்களை 1 வருடம் கண்காணிக்க இளஞ்சிறார்நீதிகுழுமம் உத்தரவு.

சென்னை, ஐஸ்அவுஸ், நடேசன் ரோட்டில் உள்ள தீர்த்தபாளிஸ்வரர் கோவிலில் காவலாளியாக வேலை பார்த்த பாபு, வ/51, த/பெ.தனசேகரன் என்பவர் கடந்த 17.06.2021 அன்ற ோவில் பாதுகாப்பு பணியிலிருந்தபோது, அங்கு  உண்டியலை உடைத்து திருடுவதற்காக வந்த  4 சிறுவர்களை தடுத்த போது, 4 நபர்களும் மேற்படி பாபுவை  இரும்பு ராடால் தாக்கிவிட்டு  அவரதுசெல்போனை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளனர். இரத்தகாயமடைந்த பாபு சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார்.இது குறித்து D-3 ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்த  ேற்படி ஆதாய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4 இளஞ்சிறார்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.இவ்வழக்கு தொடர்பான விசாரண  12வதபெருநகரகுற்றவியல் இளஞ்சிறார் நீதிகுழுமத்தில் நடைபெற்று வந்தநிலையில்,  D-3 ஐஸ்அவுஸ் காவல் நிலைய ஆய்வாளர்தலைமையிலான காவல் குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்தும், நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவலர் திரு.M.பிரகாஷ்முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும், வழக்கு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கண்காணித்தும் வந்த நிலையில், நீதிமன்றநடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிவடைந்துஇவ்வழக்கில் கடந்த 16.02.2023 தீர்ப்பு வழங்கப்பட்டது. மேற்படிவழக்கில் சம்பந்தப்பட்ட இளஞ்சிறார் ஒருவரை  3 ஆண்டுகள் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் வைத்துகண்காணிக்கவும் மற்ற    3 இளஞ்சிறார்களின் நடவடிக்கைகளை 1 வருடம் கண்காணிக்க கனம் நீதிபதி அவர்கள்தீர்ப்பு வழங்கினார்.  சிறப்பாக பணிபுரிந்த விரல் ரேகை பிரிவு துணை காவல்கண்காணிப்பாளர் திரு.பஞ்சாட்சரம் உட்பட 11 காவல்அதிகாரிகள் மற்றம் காவல் ஆளிநர்கள  ென்னை பெருநகரகாவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள்இன்று (18.02.2023) நேரில் வரவழைத்து, வெகுமதி மற்றும்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.