சிற்பி திட்டத்தில் உள்ள அரசு பள்ளியைச் சேர்ந்த 5,000 மாணவ, மாணவிகள் கல்வி சுற்றுலாவாக தமிழ்நாடு காவல் உயற்பயிற்சியகத்திற்கு இரயில் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், ஒழுக்கத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்கவும், நாட்டுப்பற்றுடன், நல்லபண்புகளை வளர்த்துக் கொள்ளவும், அவர்களை நல்வழிபடுத்திடவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  கடந்த  14.09.2022 அன்று கலைவாணர் அரங்கத்தில் சிற்பி (SIRPI – Students In Responsible Police Initiatives) என்ற புதிய திட்டத்தை துவக்கிவைத்தார். காவல்துறை குறித்து, பள்ளி மாணவர்கள்அறிந்து, காவல்துறையுடன் வளர்த்து நல்லுறவை ஏற்படுத்தி, சட்டத்தை மதிக்கும் சிறந்த குடிமக்களாகவும், பொறுப்புமிக்க மாணவர்களாகவும் உருவாக்குவதே சிற்பி திட்டத்தின்தலையாய நோக்கமாகும்.

தற்காக, சிற்பி திட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த 2,558 மாணவர்கள் மற்றும் 2,442 மாணவிகள் எனமொத்தம் 5,000 மாணவ, மாணவிகளுக்கு, வாரந்தோறும், காவல்துறை அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.  

மேலும், 07.01.2023 அன்று காலை எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் சிற்பி திட்டத்தின் 5,000 மாணவமாணவிள் ஒரே நேரத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டனர். இதற்காக, உலக சாதனை யூனியன்(World Records Union), தமிழக இளம் சாதனையாளர்கள்சாதனை புத்தகம், (Tamilnadu Young Achievers Book of Records), உலக இளம் சாதனையாளர்கள் சாதனைபுத்தகம், (world Young Achievers Book of Records) ஆகிய3 அமைப்பினர் சென்னை பெருநகர காவல் துறைக்குமேற்படி 3 சாதனை சான்றிதழ்களை, சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.பஅவர்களிடம்  வழங்கினார்கள்.

இதனைத் தொடர்ந்து, சிற்பி திட்டத்தின் ஒருபகுதியான கல்வி சுற்றுலாவுக்கு மாணவ, மாணவிகளைஅழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு, இன்று(17.02.2023) காலை, சிற்பி திட்டத்தில் உள்ள 5,000 மாணவ, மாணவிகளை, சென்னை பெருநகர காவல்துறைசார்பில், இரயில் மூலம் அழைத்துச் சென்று, ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்திற்கு (Tamilnadu Police Academy), இயற்கையுடன் இணைந்த கல்வி சுற்றுலாவாக (Eco Friendly Educational Tour) அழைத்து செல்லப்பட்டனர். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு.வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள், இன்று(17.02.2023) காலை, எழும்பூர் இரயில் நிலையத்தில் சிற்பிமாணவ, மாணவிகளின் இயற்கையுடனான கல்வி சுற்றுலாபயணத்தை கொடியசைத்து, இரயில் பயணத்தை துவக்கிவைத்தார். உடன் சென்னை பெருநகர காவல்ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., மற்றும் காவல்உயரதிகாரிகள் இருந்தனர்.

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் நடைபெறும் இப்பயணத்திற்காக, 4 சிறப்பு இரயில்கள்ஏற்பாடு செய்யப்பட்டு, சிற்பி திட்டத்தின் 5,000 மாணவ, மாணவிகள், சிற்பி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள்(Nodal Officers), காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள்அழைத்துச் செல்லப்பட்டனர். 5,000 மாணவ, மாணவிகள்மற்றும் ஒருங்கிணைப்பாளர்களை இரயில் மூலம் அழைத்துசெல்வதால், சுற்று சூழல் மாசுபடாமல், இயற்கையை பேணிகாக்கும் பயணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல்ஆணையாளர் முனைவர் J.லோகநாதன், இ.கா.ப, (தலைமையிடம்), இணை ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர் B.சாமூண்டிஸ்வரி, இ.கா.ப, துணைஆணையாளர்கள் துணை ஆணையாளர்கள் திரு.S.ராதாகிருஷ்ணன் (தலைமையிடம்), திரு.M.ராமமூர்த்தி, (நிர்வாகம்), திரு.S.ஆரோக்கியம் (நவீனகட்டுப்பாட்டறை), திரு.K.சௌந்தராஜன் (ஆயுதப்படை-1), இரயில்வே அதிகாரிகள், சிற்பி திட்ட ஒருங்கிணைப்புபள்ளி ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.