சிற்பி திட்டத்தில் உள்ள அரசு பள்ளியைச் சேர்ந்த 5,000 மாணவ, மாணவிகள் கல்வி சுற்றுலாவாக தமிழ்நாடு காவல் உயற் பயிற்சியகத்திற்கு இரயில் மூலம் அழைத்து செல்லப்பட்டதற்காக, அமைச்சர் உலக ஒன்றிய பதிவு அமைப்பினரின் உலக சாதனை சான்றிதழை, சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் வழங்கினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவ, மாணவிகளின் சிறந்த எதிர்காலத்திற்காக ஆரம்பித்த சிற்பி திட்டத்தின் ஒரு பகுதியா, சிற்பி திட்டத்தில் உள்ள 5,000 மாணவ, மாணவிகள் சென்னை பெருநகர காவல்துறை சார்பில், (17.02.2023) அன்று காலை, எழும்பூரிலிருந்து, இரயில் மூலம் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்திற்கு (Tamilnadu Police Academy), இயற்கையுடன்இணைந்த கல்வி சுற்றுலாவாக (Eco Friendly Educational Tour)அழைத்து செல்லப்பட்டனர். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு.வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள், (17.02.2023) அன்று காலை, எழும்பூர் இரயில் நிலையத்தில் சிற்பி மாணவ, மாணவிகளின் இயற்கையுடனான கல்வி சுற்றுலா பயணத்தை கொடியசைத்து, இரயில் பயணத்தை துவக்கி வைத்தார். உடன்சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., மற்றும் காவல் உயரதிகாரிகள் இருந்தனர்.

5,000 மாணவ, மாணவிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களை இரயில் மூலம் அழைத்து செல்வதால், சுற்று சூழல் மாசுபடாமல், இயற்கையை பேணி காக்கும் பயணமாகஅமைந்தது குறிப்பிடத்தக்கது.

வண்டலூர் இரயில் நிலையத்தில் இருந்து சிற்பி திட்டத்திலுள்ள 5,000 மாணவ, மாணவிகள் பேருந்துகள் மூலம்தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்திற்கு செல்லப்பட்டு, தமிழ்நாடு காவல்துறை குறித்தும், காவல் அதிகாரிகள் மற்றும்அளிநர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்தும், காவல்துறையின் பணிகள், கடமைகள், சாதனைகள் குறித்தும்எடுத்துரைக்கப்பட்டு, அனைவருக்கும் மதிய உணவுவழங்கப்பட்டது.

கல்வி சுற்றுலாவின் பயணம் இனிதே முடிந்து, இன்று(19.02.2023) மாலை மாணவ, மாணவிகள் வண்டலூரில் இருந்து இரயில் மூலம் எழும்பூர் இரயில் நிலையம் அழைத்து ரப்பட்டனர்பின்னர் எழும்பூர் இரயில் நிலையத்தில் நடைபெற்ற, கல்வி சுற்றுலாவின் நிறைவு விழாவில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு, சிற்பி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். மேலும், இன்று சென்றகல்வி சுற்றுலாவின் அனுபவம் குறித்து மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்து, அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறினார்.

மேற்படி சுற்றுலாவில் 5,000 மாணவ, மாணவிகளை கல்வி சுற்றுலாவாக இரயில் மூலம் அழைத்துச் சென்றதற்காக World Union Records அமைப்பினர் சென்னை பெருநகர காவல்துறைக்குஉலக சாதனை சான்றிதழை வழங்குவதாக அறிவித்தனர். அதன்பேரில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுமேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இந்த உலக சாதனை சான்றிதழை சென்னை பெருநகர காவல்ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களிடம்வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், இரயில்வே கூடுதல் காவல் இயக்குநர்திருமதி.வனிதா, இ.கா.ப., சென்னை பெருநகர காவல் கூடுதல்ஆணையாளர் முனைவர் ஜே.லோகநாதன், இ.கா.ப, (தலைமையிடம்), இணை ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர் பி.சாமூண்டிஸ்வரி, இ.கா.ப, துணை ஆணையாளர்கள்திரு.தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., (திருவல்லிக்கேணி), திரு.எஸ்.ராதாகிருஷ்ணன் (தலைமையிடம்), திரு. எம்.ராமமூர்த்தி, (நிர்வாகம்), திரு.ஆரோக்கியம் (நவீன கட்டுப்பாட்டறை), திரு.கே.சௌந்தராஜன் (ஆயுதப்படை-1), இரயில்வே அதிகாரிகள்மற்றும் காவல் அதிகாரிகள், சிற்பி திட்ட ஒருங்கிணைப்பு பள்ளிஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.