நாமக்கல் மாவட்டத்தில் நமது இலட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி வட்டாரத்தில் மத்திய அரசின் நமது இலட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக, எருமப்பட்டி வட்டாரத்தில் வரகூர், தேவராயபுரம், சிங்களங்கோம்பை பொட்டிரெட்டிபட்டி, பொம்மசமுத்திரம், கொடிக்கால்புதூர் ஆகிய பகுதிகளில் மத்திய அரசின் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்தபாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று (13.12.2023) நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர்கள், எண்ணெய் நிறுவன அலுவலர்கள், வங்கி, அஞ்சல் துறையினர், மத்திய அரசுத்துறை அலுவலர்கள், கிராம பொதுமக்கள், விவசாயிகள், உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

அப்போது மத்திய அரசின் திட்டங்கள் அவற்றை பெறும் வழிமுறைகள் குறித்தும் அரசு அலுவலர்கள்விளக்கமளித்தனர். மேலும், விவசாயிகளின் வயல்களில் மெட்ராஸ் உர நிறுவனத்தின் உதவியுடன் ட்ரோன் மூலம் நானோ யூரியாதெளிக்கும் செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. இந்த செயல்முறை விளக்கத்தை கிராம மக்கள்பார்வையிட்டனர்.