‘தி ராஜா சாப்’ படத்தின் முதல் பதாகை வெளியீடு

பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாராகும் காதல், திகில் கலந்த திரைப்படத்திற்குதிராஜா சாப்என பெயரிடப்பட்டு, அதன் பய்ஹாகை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. பிரபாஸின் சொந்த ஊரான பீமாவரத்தில் வெளியிடப்பட்டது. விவேக் குச்சிபோட்லா இணைதயாரிப்பாளராக பணியாற்றும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் டி. ஜி. விஸ்வ பிரசாத் தயாரிக்கிறார். ‘தி ராஜா சாப்முழுமையான பொழுதுபோக்கு அம்சம் உள்ள திரைப்படமாக இருக்கும் எனஉறுதியளிக்கிறது. பிரபாஸை அழகான தோற்றத்தில் காட்சிப்படுத்தி இருக்கும் இந்த பான் இந்தியதிரைப்படத்தில் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.*******

ரெபல் ஸ்டார்பிரபாஸ் இதுவரை ஏற்றிருக்காத ரொமாண்டிக் ஹாரர் ஜானரில் இப்படம் தயாராவதால்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும், ஆர்வமும் அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டிருக்கிறது. மேலும்திராஜா சாப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வண்ணமயமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தபோஸ்டரில் பிரபாஸ் லுங்கியை அணிந்து விண்டேஜ் தோற்றத்தில் அசத்தியிருக்கிறார். ஜாலியானமற்றும் ரொமாண்டிக்கான கேரக்டர் லுக்கில் பிரபாஸை பார்த்ததும்.., ரசிகர்களுக்கும்திரையுலகினருக்கும் புது விதமான உணர்வை அளித்திருக்கிறது.

தி ராஜா சாப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒரு வண்ணமயமான திரைப்படத்தை காணவிருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குநர் மாருதி. இவரது இயக்கத்தில்  பலே பலே மகடிவோய்‘, ‘பிரதி ரோஜுபந்தகேபோன்ற வெற்றி பெற்ற குடும்பம் பொழுது போக்குபடங்களை இயக்கியிருக்கிறார். மேலும் தெலுங்கு திரையுலகில் வெளியான முதல் காதலும் திகிலும்கலந்த திரைப்படமானபிரேம கதா சித்திரம்எனும் வெற்றி படத்தையும், காதலும், நகைச்சுவையும்கலந்தமகானுபாவுடுபோன்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தையும் இயக்கியவர். இவரது இயக்கத்தில் தயாராகும் காதலும், திகலும் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும்தி ராஜா சாப்படத்தில்  ரெபல் ஸ்டார் பிரபாஸுடன் இணைவதால் பரவசத்துடன் கூடிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.