சுதந்திரதின கொடியை ஏற்றிய வீட்டுவசதித்துறை தலைவர் பூச்சி முருகன்

இந்திய நாட்டின்   78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வீட்டுவசதித்துறை வாரியத் தலைமை அலுவலகமான கோயம்பேடு வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியினை பழம் பெறும் நடிகர் சிவசூரியனின் மகனும் தமிழக வீட்டு வசதித்துறையின் தலைவருமான திரு. பூச்சி முருகன் அவர்கள்  ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார். வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.சமீரன் இ.ஆ.ப., வாரிய செயலாளர் மற்றும் பணியாளர் அலுவலர் (பொறுப்பு) திரு.புண்ணியகோடி,  வாரிய நிதி ஆலோசகர் திரு. அன்பழகன், தலைமை பொறியாளர்கள் திரு. கண்ணன், திரு.சரவணன் உள்ளிட்ட வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.