யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஓய்வு நிலைப் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜாவின் நான்கு நூல்கள் மார்க்கம் நகரில் வெளியிடப்பெறுகின்றன

அண்மையில் கனடாவில் நடைபெற்ற ‘வென்மேரி’ சர்வதேச விருது விழாவில் கலந்து கொள்ளவென இங்கு வந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஓய்வு நிலைப் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்களின் நான்கு நூல்கள் மார்க்கம் நகரில் வெளியிடப்பெறுகின்றன.

மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியின் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்களின் ஏற்பாட்டிலும் அவர் தலைமையிலும் நடைபெறவுள்ள இந்த நூல்கள் வெளியீட்டு விழாவானது எதிர்வரும் 24-08-2024 சனிக்கிழமையன்று மாலை 4.00 மணி தொடக்கம் 6.30 வரை 5665 14th Avenue, Markham என்னும் விலாசத்தில் அமைந்துள்ள Aanlin Community Centre Auditorium என்னும் சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் வெளியிடப்படவுள்ள பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்களின் பின்வரும் நூல்கள் ஏற்கெனவே பல்லாயிரக்கணக்கான வாசகர்களாலும் பல்கலைக்கழக மாணவர்களாலும் வாசிக்கப்பெற்று பாராட்டைப்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்த்ககது. இந்த விழாவில் பங்கு கொண்டு பேராசிரியரின் கலை இலக்கிய மற்றும் மொழி-கல்வி சார்ந்த பணிகளுக்கு ஆதரவு வழங்குமாறு விழா ஏற்பாட்டாளர்கள் வேண்டிக்கொள்கின்றார்கள்.

மேலதிக விபரங்களுக்கு”- 647 220 5278 அல்லது 416 732 1608 ஆகிய இலக்கங்களை அழைக்குமாறு கேட்கப்பெறுகின்றனர்.