பரமக்குடியில் நடைபெறவுள்ள சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்கள் நினைவு தினத்தையொட்டி மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்.இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு

பரமக்குடியில் நடைபெறவுள்ள சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்கள் நினைவு தினத்தையொட்டி மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்.இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு  இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று (06.09.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்.இ.ஆ.ப., அவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களுக்கு ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் மணிமண்டபத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து வருகின்ற 11.09.2024 அன்று சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கான உட்கட்டமைப்பு வசதி, சாலை வசதி மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகிய திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் நினைவிடத்திற்கு வந்து செல்வதற்கேற்ப போதிய வசதிகளை அமைத்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்.இ.ஆ.ப., அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் பரமக்குடியில் புதிதாக கட்டப்பட்டுவரும் அரசு தலைமை மருத்துவமனை கட்டடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கௌர்,இ.ஆ.ப., பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல்மாறன்,  பரமக்குடி கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  சபரிநாதன், பரமக்குடி வட்டாட்சியர் சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.