ராமநாதபுரத்தில் (07.10.2024) வன உயிரின வார விழாவை முன்னிட்டு வன உயிரின விழிப்புணர்வு வாகனம் கொடியசைத்து துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜகதீஷ் சுதாகர்,இ.வ.ப., முன்னிலையில் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., கொடியைசைத்து துவக்கி வைத்தார். வன உயிரின வார விழாவையொட்டி கடலோரப் பகுதியில் பொதுமக்கள் வன உயிரினங்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு பெற்றிடும் வகையில் நடமாடும் வாகனம் மூலம் இன்று முதல் அக்டோபர் 13-ம் தேதி வரை தனுஷ்கோடி முதல் வேம்பார் வரை உள்ள மீனவ கிராமப் பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் மாணவ, மாணவிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் வன உயிரினங்கள் பாதுகாப்பில் தனது பங்களிப்பை ஈடுபடுத்திட வேண்டுமென செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.