சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் காவலர் குறை தீர்க்கும்சிறப்பு முகாமில், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து 199குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப, அவர்கள்இன்று (25.10.2024) மதியம் வேப்பேரி, காவல் ஆணையரகத்தில் நடைபெற்‘‘காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில்‘‘ ென்னை பெருநகர காவல், மேற்குமண்டலத்தில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் குறைகளைகேட்டறிந்து, அவர்களிடமிருந்து 199 குறைதீர் மனுக்களை பெற்றார்.

இம்முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள்பணிமாறுதல், தண்டனை களைதல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதியம்குறைபாடு களைதல் உள்ளிட்ட 199 மனுக்களை பெற்று, இம்மனுக்கள் மீதுவிரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கஉத்தரவிட்டார்.

இம்முகாமில், சென்னை பெருநகர காவல், கூடுதல் ஆணையாளர்கள்                        திரு.கபில்குமார் சி சரட்கர், இ.கா.ப, (தலைமையிடம்), திரு.K.S.நரேந்திரன்நாயர், இ.கா.ப., (வடக்கு), காவல் இணை ஆணையாளர்கள் திரு.P.விஜயகுமார், இ.கா.ப (மேற்கு மண்டலம்), திருமதி.A.கயல்விழி, இ.கா.ப. (தலைமையிடம்),துணை ஆணையாளர் (தலைமையிடம்) திருமதி.S.மேகலீனா ஐடன், காவல்அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.