பெரியார் சிலைக்கு காவி வர்ணம் – கே.எஸ்.அழகிரி கண்டனம்

திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர், சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலை மீது காவி வர்ணம் பூசி வகுப்புவாத சக்திகள் வன்முறை வெறியாட்டம் நிகழ்த்தியுள்ளனர். இத்தகைய அவமதிப்புகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டிய தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்? தமிழ் சமுதாயத்திற்கு பகுத்தறிவு, சுயமரியாதை, சமூக நீதியை பெற்றுத்தந்த தந்தை பெரியார் சிலையை களங்கப்படுத்துகிற வகையில் செயல்படுபவர்கள் எவராக இருந்தாலும், அவர்களை தமிழக அரசு உடனடியாக கைது செய்யவேண்டும். அதை செய்ய தமிழக அரசு தவறுமேயானால் கடும் விளைவுகளை சந்திக்கவேண்டி வரும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.