பெரியார் சிலை அவமதிப்பு – குற்றவாளிகளை கைது செய் – இரா.முத்தரசன்

திருச்சி மாவட்டத்தில் இனாம் குளத்தூர், சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் ஈ.வெ.ரா சிலைக்கு, சமூக விரோதிகள் சிலர் காவி சாயம் பூசி, செருப்பு மாலை போட்டு அவதித்துள்ளதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. சமூக அமைதியை சீர்குலைத்து, வெறுப்பு அரசியலை பரப்புரை செய்து, அரசியல் ஆதாயம் தேடும் மதவெறி சக்திகளின் சதிகாரச் செயல் தொடருவதை இச் சம்பவம் வெளிப்படுத்துகிறது. சட்டம் – ஒழுங்கை காத்த, பராமரிக்க வேண்டிய காவல் துறை இது போன்ற சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்வதில் அலட்சியம் காட்டுவதும் இந்த இழிசெயல்கள் தொடருவதற்கு காரணம் என குற்றம் சாட்டுகிறோம். இந்த சட்ட விரோத, சமூக விரோத சம்பவங்களை தடுக்கும் முறையில் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும். இனாம் குளத்தூரில் பெரியார் சிலையை இழிவு செய்த குற்றவாளிகளை தாமதமின்றி கைது செய்து, தண்டிக்க வேண்டும் என தமிழக அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.