பள்ளி குழந்தைகளுக்காக இந்தியா-ரஷ்யா இணைந்து தொடங்கும் 3.0 புதுமைத் திட்டம்

அடல் புதுமை இயக்கமும், ரஷ்யாவை சேர்ந்த சிரியஸ் (ரஷ்யா) அமைப்பும் இணைந்து எய்ம்-சிரியஸ் புதுமைத் திட்டம் 3.0-ஐ தொடங்கி உள்ளன. இந்தியா, ரஷ்ய நாடுகளைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகளுக்காக இணைய வழியிலான இந்த 14 நாள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நவம்பர் 7-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் இந்த திட்டத்தில் 48 மாணவர்கள், 16 கல்வியாளர்கள் மற்றும் வழிநடத்துபவர்கள், இணையப் பொருட்கள் மற்றும் கைபேசி செயலிகளை பல்வேறு துறைகள் எதிர்கொண்டுள்ள சர்வதேச சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில் உருவாக்குவார்கள்.