நான் செய்த தவறை இளம் நடிகைகள் பின்பற்றிவிடக்கூடாதென்கிறார் நடிகை ஷகிலா

நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் அறிமுகக்கூட்டத்தில் பேசிய நடிகை ஷகிலா நான் தவறு செய்திருக் கிறேன் என்றும் அந்த தவறை தற்போது வரும் இளம் நடிகைகளும் மற்ற இளம் பெண்களும் பின்பற்றிவிடக் கூடாது என்றும் உருக்கமாக பேசினார். மேலும் அவர் கூறும்போது, பயோபிக் எடுக்கமளவு எனக்கு தகுதியுள்ளதா, என எனக்கு தெரியாது. உயிரோடு இருப்பவருக்கு பயோபிக் எடுப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. எனது இந்த பயணத்தில் பெரும் ஆதரவளித்த நண்பர்கள், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் பெரும் நன்றி. நடிகை எஸ்தர் இப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். எனது வாழ்வில் நான் கடந்து வந்த சம்பவங்களை எனது புத்தகத்தில் உள்ளவற்றை படக் குழுவுடன் பகிர்ந்து கொண்டேன். அதில் நடிகையாக ஆசைப்படுபவர்களுக்கு ஒரு சிறிய செய்தி இருக்கிறது, அது சரியாக படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இப் படத்தில் பங்கு கொண்டு உழைத் திருக்கும் அனைவருக்கும் எனது நன்றி.

என்று கூறினார்.