திருநங்கைகள் சுய தொழில் புரிய திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் 2 தள்ளுவண்டிகளை வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், சென்னையில் உள்ள திருநங்கைகள் வாழ்வாதாரம் உயர்ந்திடவும், அவர்கள் சுய தொழிலில் ஈடுபட்டு கௌரவமான முறையில் வாழ்ந்திடும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை சென்னை பெருநகர காவல் துறை செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக 10.1.2021 அன்று மதியம் F-5 சூளைமேடு காவல் நிலைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையாளர் பொறுப்பு R.கிருஷ்ணராஜ் கலந்து கொண்டு பல்லாவரம் லயன்ஸ் கிளப் சார்பாக வழங்கப்பட்ட ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 2 தள்ளு வண்டிகளை திருநங்கைகள் மோகனா மற்றும் சபிதா ஆகிய இருவருக்கு வழங்கினார்.

இதுவரை சூளைமேடு காவல் நிலைய போலீசார் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 8 திருநங்கைகளுக்கு சுயதொழில் புரிய 8 தள்ளு வண்டிகளை வழங்கியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் லயன்ஸ் கிளப் தலைவர் அசோக், சூளைமேடு காவல் நிலைய ஆய்வாளர், காவல் ஆளினர்கள் மற்றும் திருநங்கை அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.