சாய்பாபா தியான மையம், இலவச தொழில் பயிற்சி மையம் ஆகியவற்றை திறந்து வைத்த எடப்பாடி பழனிச்சாமி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி மு. பழனிசாமி சென்னை, மணப்பாக்கம் ஸ்ரீ வெற்றி சாய்பாபா தியான மையம், இலவச தொழில் பயிற்சி மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார். இந்நிகழ்வுகளின் போது, கழக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான  கடம்பூர் ஊ. ராஜூ,  காஞ்சிபுரம் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான  ஏ. சோமசுந்தரம், சென்னை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் மு.ஞ. கந்தன், ஆலந்தூர் மேற்கு பகுதிக் கழகச் செயலாளர் நந்தம்பாக்கம் ராஜசேகர் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் உடன் இருந்தனர். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சென்னை புறநகர் மாவட்டக் கழக அவைத் தலைவர் மணப்பாக்கம் மு. காமராஜ், 157-வது வட்டக் கழகச் செயலாளர் மணப்பாக்கம் மு. பாண்டியன், சென்னை மாநகராட்சி 157-வது வார்டு மாமன்ற உறுப்பினர் உஷாராணி பாண்டியன், மஞ்சு காமராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.