மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மதுசூதனனைய் நலன் விசாரித்த சசிகலா

உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  கழக அவைத்தலைவர் E.மதுசூதனனை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி K.பழனிசாமி , சட்டமன்ற துணை தலைவர்  ஓ.பன்னீர்செல்வம், ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். இவர்களை தொடர்ந்து சசிகலா மதுசூதனனிடம் நலம் விசாரிக்க சென்றார்.

கழக அவைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான  இ.மதுசூதனன் (வ/81)  கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனது மனைவியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இதனிடையே கொரோனா வைரஸ் தொற்றால் மூச்சு திணறல் ஏற்பட்டு அவரது மனைவி ஜீவா கடந்த ஏப்ரல் 19 – ந்தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

பின்னர் மருத்துவ சிகிச்சை முடிந்து மதுசூதனன் தண்டையார்பேட்டை  கோதண்டராமன் தெருவில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வந்த அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டதால் நேற்று மாலை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் இதனை அறிந்த சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதலமை‌ச்ச‌ருமான திரு எடப்பாடி கே.பழனிச்சாமி, மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும் கழக ஒருங்கிணைப்பாளருமான திரு ஒ.பன்னீர்செல்வம், ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.