அரவிந்சாமியின் எதிர்பாராத திருப்பம் கொண்ட “ரெண்டகம்”

பிலினி இயக்கத்தில் அரவிந்சாமி, மலையாள நடிகர் குஞ்சாகோ போபன் நடித்த படம் ரெண்டகம்.  30 கோடி ரூபாய் தங்கத்தை கொள்ளயடிக்கும் போது கொள்ளைக் கும்பலின் தலைவனுக்கு குண்டடிபட்டு பழைய நிகழ்வுகளை மறந்து விடுகிறார். அவரது இழந்த நினைவுகளை மீட்டு,  தங்கத்தை அவரிடமிருந்து கொள்ளயடிக்க வேரொரு கொள்ளை கும்பல் முயற்சிப்பதுதான் கதை.  நினவுகளை மறந்து திரையரங்கில் பாப்கான் விற்கும் அரவிந்சாமியின் வெகுளித்தனமான நடிப்பும் அமைதி சூழ்ந்த அவரது முகமும் வியக்க வைக்கிறது. அவருடன் இணைந்து பயணிக்கும் குஞ்சிகோ போபனின் சுறுசுறுப்பான நடிப்பு பாராட்டப்பட வேண்டும்.  படத்தின் பின் பகுதியின் ஒவ்வொரு காட்சியும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது………..

யாரும் எதிர்பாராத திருப்பு முனையை இயக்குநர் கையாண்டிருக்கிறார். படம் இரண்டாம் பாகத்திற்கு செல்வதாக அமைந்ந்துள்ளது.