செங்கல்பட்டு அறிஞர் அண்ணா அரசினர் ஆண்கள்மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப. வழங்கி வாழ்த்து தெரிவிப்பு.

செங்கல்பட்டு நகராட்சி அண்ணா சாலையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கோடை விடுமுறை முடிந்து (10.06.2024) இன்று முதல் நாள் பள்ளி வகுப்புகள்துவங்கப்பட்ட நிலையில், பள்ளியில் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையின் சார்பில் 2024 – 2025 கல்வியாண்டில் வழங்கப்படும் விலையில்லா பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கி  வாழ்த்துகளை தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து  பள்ளி வளாகத்தில் நடைபெற்று  வரும் மாணவர்களுக்கு ஆதார் அட்டை பெறுதல், முகவரி மாற்றம், புகைப்படம் மாற்றம், திருத்தம் ஆகியவற்றிற்காக நடைபெறும் முகாமினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.அங்கு குடிநீர் வசதிகள் ஏற்படுத்தித் தருமாறு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் முதன்மை மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.கற்பகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திரு.உதயகுமார், மாவட்ட கல்வி அலுவலர் திரு.இரவிச்சந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.