மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் ஆட்சியர்

செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் 20 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களை பெற்றுகொண்டார். மேலும் CSR (Corporate Social Responsibility) நிதி மூலம் ரூ.11,120/- மதிப்பீட்டில் 4 பயனாளிகளுக்கு காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவிகளும், 1 பயனாளிக்கு ரூ.48,993/- மதிப்பீட்டில் பிரெய்லி ரீடர் (Braillee Orbit Reader), 4 பயனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளும், ரூ.31,084/- பிரெய்லி கை கடிகாரம் 19 பயனாளிகளுக்கும் ரூ.12,300/- மதிப்பீட்டில் 2 பயனாளிக்கு கார்னர் சேர் ஆக மொத்தம் ரூ.1,35,097/- மதிப்பீட்டில் 30 பயனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் மனு அளித்த அரைமணி நேரத்தில்  2 பேருக்கு சக்கர நாற்காலி மற்றும் ஒருவருக்கு பெட்டி கடை வைப்பதற்கு அனுமதி ஆணை வழங்கினார் . உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆர்.பாலாஜி, அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.