விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

எதிர்வரும் 07.09.2024 அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு (29.08.2024) செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் கடற்கரையில் விநாயகர் சிலைகளை பாதுகாப்பான நடைமுறையில் கரைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதம் இ.கா.ப.,  தாம்பரம் மாநகர கூடுதல் காவல் ஆணையர் தலைமையிடம் மற்றும் போக்குவரத்து  மகேஸ்வரி இ.கா.ப.,  தாம்பரம் காவல் துணை ஆணையாளர் பவன் குமார் ரெட்டி இ.கா.ப., பள்ளிக்கரணை காவல்துறை ஆணையாளர் கார்த்திகேயன் சார் ஆட்சியர்  வெ.நாராயண சர்மா, இ.ஆ.ப., மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.