செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில்  மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் 

ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் (16.09.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில், சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 186 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயற்கை அபயம் வழங்கும் திட்டத்தில் 7 பயனாளிகளுக்கு ரூ.5.08 இலட்சம் மதிப்பீட்டில் செயற்கை கால்கள், சிறு மற்றும் குறுந்தொழில் புரியும் 6 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.1.23 இலட்சம் மதிப்பீட்டில் வங்கிக்கடனுதவிகள்ஆகியவற்றை  மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

இக்குறை தீர்வு நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அறிவுடைநம்பி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நரேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதா பர்வீன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் கதிர்வேலு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நலத்துறை அலுவலர் வேலாயுதம், உதவி ஆணையர் (கலால்) ராஜன் பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பரிமளா, மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.