காவல்துறையினரிடையே ஒத்துழைப்பு கலந்துரையாடல்

சந்தோஷ் ரஸ்தோகி, இ.கா.ப., தென் மண்டல இயக்குநர், தேசிய புலனாய்வு முகமை, வேப்பேரி, காவல் ஆணையரகத்தில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ,கா.ப.,வை நேரில் சந்தித்து காவல்துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமைக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், கலந்துரையாடினார். இந்த உயர்மட்டக் கூட்டத்தில் பல்வேறு பிராந்திய பிரச்சனைகள் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த குறிப்பிட்ட நிகழ்வுகள் குறித்து கலந்துரையாடினர். மேலும், இரு துறைகளுக்கிடையில் சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் தடையற்ற தகவல் பரிமாற்றத்தை வளர்ப்பதன் முக்கியத்தும் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது, தேசிய பாதுகாப்பு சம்பந்தமான முக்கிய வழக்குகளை திறம்பட புலன் விசாரணை  செய்ய ஏதுவாக சென்னை பெருநகர காவல் துறைக்கு என்.ஐ.ஏ.அதிகாரிகள் மூலம் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.