புலமைபித்தனின் பேரன் திலீபன் புகழேந்தி நடிக்கும் புதிய படங்கள்

மக்கள் மனதில் மறையாத பல பாடல்களை வழங்கிய புலவர் புலமைப்பித்தனின் பேரன் திலீபன் புகழேந்தி.  இவர் பள்ளிக்கூடம் போகாமலே, எவன் என்கிற  இரு படங்களிலும் கதாநாயகனாக நடித்தவர் .  இப்படங்கள் திரைக்கு வந்து வெற்றி பெற்றன .சாகாவரம் என்கிற படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்து உள்ளார். இப்படம் முடியும் தருவாயில் உள்ளன. ஆண்டனி என்கிற திரைப்படமும் முடியும் தருவாயில் உள்ளது . இவற்றுக்கு இடையில் 5 கதாநாயகிகளுடன்  நடிக்கும் பெயரிடப்படாத ஒரு  திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டு இருக்கிறார் .******