இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி அதிகாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியினை தொடங்கி வைத்தார்.

இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்திய காவல் பணி (IPS), இந்திய வனப்பணி (IFS), இந்திய வருமானப்பணி (IRS – GST & IT) மற்றும் இந்தியன் இரயில்வே அதிகாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட்போட்டிகள் 2023 – பிப்ரவரி 12, 25, மார்ச் 05 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சென்னைபோரூர், இராமச்சந்திரா மருத்துவகல்லூரியிலும், பிப்ரவரி 19ஆம் தேதி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரியிலும், கொளப்பாக்கம் ஒமேகா இன்டர் நேஷனல் பள்ளியிலும் நடைபெறுகிறது. இந்த கிரிக்கெட்போட்டிகளின்இறுதிபோட்டி மார்ச் 12ஆம் தேதி அன்று போரூரில் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து கிரிக்கெட்போட்டிகள் நிறைவடைந்த பின்னர் சென்னை, நேரு விளையாட்டு அரங்கில் கால்பந்து போட்டிகளும், நேருஉள் விளையாட்டு அரங்கில் இறகுப்பந்து போட்டிகளும் நடத்தப்படவுள்ளதுதமிழ்நாடு ..எஸ் மற்றும் .பி.எஸ் அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல்கிரிக்கெட் போட்டியினை போரூர், இராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும்விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய .பி.எஸ் அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து102 ரன்கள் எடுத்த நிலையில் ..எஸ் அணி 103/4 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுமேலும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை     அமைச்சர் திரு. உதயநிதிஸ்டாலின் அவர்கள், இராமச்சந்திரா மருத்துவ கல்லூரி, அறிவியல் விளையாட்டு மையத்தில் உள்ள கிரிக்கெட்வலைப்பயிற்சி, பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், நீச்சல், சைக்கிளிங் பயிற்சி மையங்கள், மற்றும் சிந்தடிக்ஹாக்கி மைதானம் ஆகிய விளையாட்டு கட்டமைப்புகளை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்முனைவர் அதுல்ய மிஸ்ரா, .., தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் மற்றும் தமிழ்நாடு விளையாட்டுமேம்பாட்டு ஆணைய துணைத் தலைவர் டாக்டர் அசோக் சிகாமணி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணைய உறுப்பினர் செயலர்     திரு. ஜெ. மேகநாத ரெட்டி இஆப. மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.