காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக்கழகம் புதுச்சேரியின் இயக்குநராக முனைவர் கணேசன் கண்ணபிரான் பொறுப்பேற்பு

காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக்கழகம் புதுச்சேரியின் பொறுப்புஇயக்குராக முனைவர் கணேசன் கண்ணபிரான் அவர்கள் மத்திய கல்வி அமைச்சகத்தால்03.05.2023 அன்று நியமிக்கப்பட்டதை அடுத்து அவர் இன்று (08.05.2023) பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு முன்பு இயக்குராக இருந்த முனைவர் கி. சங்கரநாராயணசாமி அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து அவர் இந்தபதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.  முனைவர் கணேசன் கண்ணபிரான் அவர்கள் ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்தியதகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஸ்ரீ சிட்டி, சித்தூரின் இயக்குராக பதவிவகிப்பதுகுறிப்பிடத்தக்கதுமுன்னாள் இயக்குர் முனைவர் கி. சங்கரநாராயணசாமி அவர்களுக்கு நிர்வாகத்தின்சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரியாவிடை நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும்ஊழியர்கள் கலந்துகொண்டு தங்களின் நன்றிகளை தெரிவித்தனர். நிகழ்ச்சியின்இறுதியில் முனைவர் கி. சங்கரநாராயணசாமி அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.