“போதை இல்லா தமிழ்நாடு” என்ற விழிப்புணர்வு ஊட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

12.08.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உலக போதை விழிப்புணர்வு நாளினை முன்னிட்டு “போதை இல்லா தமிழ்நாடு” என்ற விழிப்புணர்வு உறுதிமொழியினை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்டம் வித்யாசாகர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப.,  முன்னிலையில் அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். உடன் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சாய் பிரனித், இ.கா.ப., சார் ஆட்சியர்  நாராயண சர்மா, இ.ஆ.ப., துணை காவல் கண்காணிப்பாளர்  புகழேந்தி கணேஷ், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ்,செங்கல்பட்டு நகராட்சி நகர்மன்ற தலைவர்  தேன்மொழி நரேந்திரன், மறைமலைநகர் நகராட்சி நகர்மன்ற தலைவர்  சண்முகம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்  உதயா கருணாகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள், வித்யாசாகர் கல்லூரி முதல்வர் முனைவர்.இரா.அருணாதேவி, பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.