தமிழ்நாடு அரசு பாடசாலையின் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், நெல்வாய் ஊராட்சியில் அரசினர் நடுநிலை பாடசாலையின் நூற்றாண்டு விழாவினை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், முன்னாள் மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.