வேலு நாச்சியார் படபிடிப்புக்காக லண்டன் சென்ற தயாரிப்பாளர் பஷீர்

வீரமங்கை ராணி வேலுநாச்சியார் படபிடிப்புக்காக லண்டன் மாநகரில் படபிடிப்புத்தளங்களை  பார்ப்பதற்காக ஜெ.எம்.பஷீர் உடன் ஆயிஷா மற்றும் படக்குழுவினர் சென்றுள்ளார்கள். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அடக்கு முறையை எதிர்த்து போராடி வென்ற முதல் இந்திய சுதந்திர போராட்ட  வீரமங்கை வேலுநாச்சியார் பிரிட்டிஷ் படையுடன் மோதும் போர் காட்சிகள் லண்டனில் படமாக்கபடவுள்ளன‌. தேசிய தலைவர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதால் அடுத்தகட்ட படபிடிப்புக்காக தயாராகிவிட்டனர் படக்குழுவினர்.