சசிகுமார், சத்யராஜ், பரத் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்

குடும்ப உறவுகளின் வலிமையை பற்றி உணர்த்தும் ஜனரஞ்சகமான படமாக உருவாக உள்ளது. எதார்த்தமான கதை தேர்வில் தற்போது கவனம் ஈர்த்து வரும் சசிகுமாரின் அடுத்த படத்தில் பரத், சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மேகா செட்டி, மாளவிகா இருவரும் இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள் . இவர்களுடன் எம் எஸ் பாஸ்கர், ஆடுகளம் நரேன், கஞ்சா கருப்பு,  இந்துமதி ஜோமல்லூரி ஆகியோர் நடிக்க உள்ளனர். இப்படத்திற்கு எஸ் ஆர் சதீஷ்குமார் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். ஆர் ரகுநந்தன் இசை அமைக்கிறார்.  எம்.குரு இப்படத்தின் கதை  திரைக்கதை வசனம் எழுதி இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.  தர்மராஜ் வேலுச்சாமி  இப்படத்தை  ஜம்பாரா என்டர்டெயின்மென்ட் சார்பில்  தயாரிக்கிறார்.*******

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி அன்று பட்டுக்கோட்டையில் துவங்குகிறது. இதன்  படப்பிடிப்பு பட்டுகோட்டை, மன்னார்குடி, முத்துப்பேட்டை, தஞ்சாவூர், வேதாரணியம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர் .