விவசாயிகளுக்கு உழவு வாகனம் வழங்கிய நடிகர்கள்

தமிழக நட்சத்திர நடிகர்களான ராகவா லாரன்ஸ்சும் எஸ்.ஏ.சூர்யாவும் இணைந்து லாரன்சின் ‘மாற்றம்’ அறக்கட்டளை மூலம் விவசாயிகளுக்கு உழவு வாகனம் வழங்கினார்கள். ராகவா லாரன்ஸ் பத்து ஊர்களுக்கு தனது குழுவுடன் நேரில் சென்று 10 ஏழை விவசாயிகளுக்கு தனது சொந்த செலவில் தலா 10  உழவ. வாகனங்களை வழங்கினார். இதை தொடர்ந்து நேற்று முன் தினம் நடிகர் எஸ். ஜே.சூர்யா மாற்றத்திற்கு தனது பங்களிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேனம்பக்கம், மேல்தெருவில் வசிக்கும் விவசாயி பத்ரி என்பவருக்கு அவரது சொந்த செலவில் டிராக்டர் வழங்கி மாற்றத்திற்கான தனது சேவையை துவங்கினார்.********


இந்த அறக்கட்டளையில் முன்னணி நடிகர் எஸ் ஜே சூர்யா மற்றும் கலக்கப்போவது யாரு பாலா, செஃப் வினோத் , அறந்தாங்கி நிஷா ஆகியோறும் இணைந்து செயல்பட்டு  வருகிறார்கள்.